தமிழ்நாடு

ஜெயலலிதா புகைப்படம்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

webteam

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு விழாக்கள், மற்றும் அரசு அலுவலகங்களில் பயன்படுத்த தடை விதிக்க கோரும் வழக்கு குறித்து பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

திமுக எம்எம்ஏ ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்கள், நலத்திட்டங்கள், அரசு விழாக்களில் பயன்படுத்துவது பற்றி, அரசு தனது தெளிவான நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பான விசாரணை மார்ச் 20‌ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.