தமிழ்நாடு

தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக ஜாபர் சேட் நியமனம்.!

webteam

தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக ஜாபர் சேட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ரயில்வே டிஜிபியான சைலேந்திர பாபுவிடம் கூடுதல் பொறுப்பாக தீயணைப்புத்துறை இருந்தது. இந்நிலையில் தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக ஜாபர் சேட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிஜிபி சைலேந்திர பாபு ரேஷன் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி பணியையும் கவனிப்பார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஜாபர் சேட் 2019ல் சிபிசிஐடி இயக்குநராக நியமிக்கப்பட்டார். பல்வேறு முக்கிய வழக்குகளில் அவர் பங்காற்றினார். பின்னர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை டிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.