தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

kaleelrahman

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் "தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும். சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தென்மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.