தமிழ்நாடு

அறிவுரையை ஏற்று ரேஷன் கடைகளில் முதல்வர் ஆய்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது - ஜெயக்குமார்

kaleelrahman

தன்னுடைய அறிவுரையை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் பேசும்போது, ’’முன்னாள் அமைச்சர் ராஜேந்தி பாலாஜி மீதான வழக்கு விசாரணைக்கு சென்றபோது தனிப்படையினர் கைது செய்துள்ளனர். இதனை நீதிமன்றமே கண்டித்துள்ளது. ராஜேந்திரபாலாஜி அதிமுக என்பதால் திமுக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், ‘’பொங்கல் பரிசு வழங்கப்பட்டதில் பாதி பொருட்கள் இல்லை. மக்கள் திமுகவை திட்டுகின்றனர். இதனை அறிந்து கொள்ள அரசாட்சி காலத்தில் அரசர் நகர் வலம் செல்வதுபோல சென்றால் மக்களின் மனநிலையையும், திட்டத்தின் பயன்பாட்டையும் தெரிந்து கொள்ளலாம் என ஏற்கனவே நான் தெரிவித்து இருந்தேன். என்னுடைய அறிவுரையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்வது மகிழ்ச்சியளிக்கிறது’’ எனவும் தெரிவித்தார்.