தமிழ்நாடு

நாளை முதல் ரயில் டிக்கெட் ஆன்லைன் கட்டணம் உயர்வு!

நாளை முதல் ரயில் டிக்கெட் ஆன்லைன் கட்டணம் உயர்வு!

webteam

நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் ஜிஎஸ்டியுடன் சேர்த்து சேவைக்கட்டணம் வசூல் செய்யப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுக்கு மீண்டும் சேவைக்கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுக்கு முன் ஏசி இல்லாத வகுப்புக்கு ரூ.20. ஏசி வகுப்புக்கு ரூ.40 சேவைக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர் டிஜிட்டல் பரிவர்த்தணையை ஊக்கப்படுத்த 3 ஆண்டுகளுக்கு முன் சேவை கட்டணத்தை ரயில்வே நிறுத்தி இருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் சேவைக்கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஏசி இல்லாத வகுப்பு டிக்கெட்டுக்கு ரூ15 ஏசி வகுப்புக்கு ரூ30 சேவைக்கட்டணத்துடன் ஜிஎஸ்டியும் வசூல் செய்யப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.