தமிழ்நாடு

ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் மாற்றம் : புதிய எஸ்.பியாக கார்த்திக் நியமனம்

webteam

ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சென்னை பூக்கடை மார்க்கெட் மாவட்ட காவல் துணை ஆணையர் கார்த்திக் புதிய எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் உயரதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் துணை ஆணையர் செல்வகுமார், வேலூர் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் எஸ்.பி பிரவேஷ் குமார் சென்னை ரயில்வே எஸ்.பி-யாகவும், சென்னை ரயில்வே எஸ்.பி மகேஷ்வரன், பூக்கடை மார்க்கெட் மாவட்ட காவல் துணை ஆணையாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை பூக்கடை மார்க்கெட் மாவட்ட காவல் துணை ஆணையர் கார்த்திக், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி வருண்குமாருக்கு பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.