தமிழ்நாடு

காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை நீடிப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளை

காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை நீடிப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளை

webteam

கரூர் மாவட்டம் மாயனூர் முதல் திருச்சி வரையில், காவிரி ஆற்றில் மணல் அள்ள விதிக்கப்பட்ட இடைக்கால தடையை செப்டம்பர் 12 ஆம் தேதி வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

காவிரி ஆற்றில் அதிகளவில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது எனக்கூறி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தனர். மனுவை தள்ளுபடி செய்யக்கோரி திருச்சி மணல் குவாரிகளின் திட்ட இயக்குநர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.