ponmudi
ponmudi pt desk
தமிழ்நாடு

“ஊழல் என்பது தமிழ்நாட்டு அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” - இந்திரகுமார் தேரடி கருத்து

webteam

அமைச்சர் பொன்முடி கைது குறித்து அரசியல் விமர்சகர் இந்திரகுமார் தேரடி பேசுகையில் “ஒரு அமைச்சர் தவறு செய்துவிட்டால் ஒட்டுமொத்தமாக அந்த அமைப்பே சீரழிந்த அமைப்பு என்று சொல்ல முடியாது. ஊழலை திமுகவும், அதிமுகவும் கண்டுபிடித்த மாதிரி பேசுவது, மிகைப்படுத்தி அரசியல் உரையாடலுக்கு மக்கள் மத்தியில் போய் பேசுவதற்கு பயன்படலாம். ஆனால், அது வாக்கரசியலில் முடிவை எட்டுவதற்கு பயன்படுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

பொன்முடி

தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை ஊழல் வழக்கில் தண்டிக்கபட்ட பிறகும் கூட அதற்குப் பிறகு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறார்.

அதனால் ஊழல் என்பது தமிழ்நாட்டு அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இதே மாதிரியான ஊழல் வழக்குகளில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்” என்று கூறினார்.