தமிழ்நாடு

மீனவர்கள் போராட்டத்தால் வர்த்தகம் பாதிப்பு

மீனவர்கள் போராட்டத்தால் வர்த்தகம் பாதிப்பு

webteam

இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவித்து நாகை மாவட்ட மீனவர்கள் 9ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 138 விசைப்படகுகளும் வீணாக கடலில் மூழ்கி வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். படகுகளை மீட்டு, அவற்றை பராமரிக்க தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 3ஆவது நாளாக நாகை தலைமை தபால் அலுவலகம் முன் 54 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலைநிறுத்தத்தால் ஆயிரத்து 600 விசைப்படகுகளும், 8ஆயிரத்து 100 பைபர் படகுகளும் கடலுக்கு செல்லவில்லை.