தமிழ்நாடு

சென்னையில் பரவும் டெங்கு காய்ச்சல்: 13 நாட்களில் 11 பேருக்கு டெங்கு உறுதி

JustinDurai
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ள நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்துள்ளன. சென்னையில் கடந்த 13 நாட்களில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெங்குவை பரப்பும் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவ மழைக்காலம் தொடங்கி விட்டதால் மாவட்டந்தோறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.