தமிழ்நாடு

பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் 3 லட்சம் வாக்குகளில் முன்னிலை

webteam

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாரிவேந்தர் முன்னிலை பெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில்  வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில்‌ 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. 

இதில் திமுக கூட்டணி தற்போது வரை 37 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதில் பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பாரிவேந்தர் சுமார் 3,20,045 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.