தமிழ்நாடு

'பணம் தராததால் வாக்களிக்க விரும்பவில்லை' - வாக்குச்சீட்டில் எழுதி வைத்த வாக்காளர்!

கலிலுல்லா

நெல்லை பாளையங்கோட்டை ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் வாக்குச்சீட்டில் வாக்காளர் எழுதிய வாசகம் கவனம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டிருந்தபோது, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டில் தான் அந்த வாக்குச்சீட்டு சிக்கியது. அந்த வாக்குச்சீட்டை பார்த்த வாக்கு எண்ணும் முகவருக்கு தூக்கி வாரிப்போட்டது.

அந்த வாக்குச்சீட்டில், 'எந்த வேட்பாளரும் ரூ.500 பணம் தராததால் வாக்களிக்க விரும்பவில்லை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து வாக்குச்சீட்டில் வாக்காளர்கள் எழுதியதால் அவர் செலுத்திய வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது.