தமிழ்நாடு

நெடுவாசலில் திட்டம் செயல்படுத்தப்படாது: ஆட்சியர் உறுதி

webteam

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி கோரிய தனியார் நிறுவனத்தின் விண்ணப்பம் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செய்படுத்த மத்திய அரசு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது குறித்து வடகாடு மற்றும் நல்லாண்டார் கொல்லை பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களது சந்தேகங்களை எழுப்பினர். அப்போது இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என்றும் ஏற்கனவே ஒஎன்ஜிசி நிறுவனம் அமைத்துள்ள ஆழ்குழாய் மூடப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எழுத்து பூர்வமாக உறுதி அளித்தார்.