தமிழ்நாடு

நிலத்தகராறு....மனைவியை சுட்டுக் கொன்ற கணவர்

webteam

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே அப்பநாயக்கன் பாளையத்தில் மனைவியை துப்பாக்கியால் கணவர் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.

அப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சந்திரசேகர், ஜோதிமணி தம்பதியரிடையே நிலத்தகராறு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சந்திரசேகர் துப்பாக்கியால் சுட்டதில் மனைவி ஜோதிமணியின் கழுத்தில் குண்டு பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜோதிமணி உயிரிழந்தார்.