தமிழ்நாடு

சென்னையில் மருத்துவமனை உதவி மேலாளர் ஊசி போட்டு தற்கொலை

கலிலுல்லா

கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் இருந்த தனியார் மருத்துவமனை உதவி மேலாளர் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சந்தீப் மோகன் என்பவர் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது அறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரின் செல்ஃபோனை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அவரின் இந்த முடிவு காதல் விவகாரம் காரணமாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.