தமிழ்நாடு

கனமழை எதிரொலி - தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கலிலுல்லா

கனமழை காரணமாக புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தீவிரமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கன மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை (27.11.2021) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நாளை தூத்துக்குடிபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.