தமிழகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் சுற்றி திரிபவர்களை கண்டறிந்து அவர்களை அரசு காப்பகங்களில் சேர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொது இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு பலர் சுற்றி வருவதாகவும், அதில் பலருக்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், அவர்களுக்கு போதிய உணவும் தங்குமிடமும் இல்லை என்றும் வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் சுற்றி திரிபவர்களை கண்டறிந்து அவர்களை அரசு காப்பகங்களில் சேர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 18ல் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.