தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டம் - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

webteam

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான உரிமத்தை ரத்து செய்யக்கோருவது குறித்து மத்திய அரசு பதில் தர வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தினர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில் “நெடுவாசல், காரைக்குடி பகுதிகளில் ஜெம் லேப்., பாரத் மெட்ரோ ரிசோர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது. மத்திய அரசின் அனுமதி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு சட்டத்திற்கு எதிரானது. ஒற்றை உரிமம் மூலம் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி தந்தது சட்டத்திற்கு எதிரானது. எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் தெரிவித்திருந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து 8 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.