தமிழ்நாடு

மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்கள் எவ்வளவு? - உயர்நீதிமன்றம்

webteam

மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்கள் எவ்வளவு என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க மேலும் இரு வாரங்கள் அவகாசம் கொடுத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களில் ஒரு சதவீதத்தைக் கூட தமிழக அரசு பயன்படுத்தவில்லை என மத்திய உணவுத்துறை அமைச்சர் கூறியிருந்ததை சுட்டிக்காட்டி மனுதாரர் வாதிட்டார். அப்போது மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்கள் எவ்வளவு என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்கள் எவ்வளவு என்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து மேலும் இரு வாரங்கள் அவகாசம் கொடுத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.