தமிழ்நாடு

பொன்.மாணிக்கவேல் மீதான வழக்கு - சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

webteam

பொன்.மாணிக்கவேல் மீது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காதர்பாஷா அளித்த புகாரில் அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிலை கடத்தலில் தொடர்புடையதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் துணை காவல் கண்காணிப்பாளர் காதர் பாஷா. இவர் பொன்.மானிக்கவேலுக்கும், சிலை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அந்த மனு மீது உரிய விசாரணை நடத்தப்படவில்லை என இன்று தெரிவித்தார். இதை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்து உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கை ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.