தமிழ்நாடு

எம்.எல்.ஏ பிரபுவுடன் செல்ல மனைவி சௌந்தர்யாவுக்கு அனுமதி

webteam

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவுடன் செல்ல அவரது மனைவி சௌந்தர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரவும் செவுந்தர்யா என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே, 19 வயது நிரம்பாத தனது மகள் சௌந்தர்யாவை கடத்தி பிரபு திருமணம் செய்ததாக பெண்ணின் தந்தை சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சௌந்தர்யாவை இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இன்று சௌந்தர்யா நேரில் ஆஜராகினார். அப்போது, முழு மனதுடன் எம்.எல்.ஏவை திருமணம் செய்திருப்பதாகவும் தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் சௌந்தர்யா வாக்குமூலம் அளித்தார்.

மேலும் கணவரும் எம்.ஏல்.ஏவுமான பிரபுவுடன் செல்ல அனுமதிக்குமாறு சௌந்தர்யா கூறியதையைடுத்து நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.