தமிழ்நாடு

கொடைக்கானலில் கடும் குளிருடன் சாரல் மழை: சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது

Veeramani

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடும் குளிருடன் சாரல் மழையும் பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது.

மலைப்பகுதிகளில் காலை முதலே மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், நண்பகல் முதல் சாரல் மழை பெய்தது. கடுங்குளிருடன் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மலைப்பகுதிகள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது.