தமிழ்நாடு

அரபிக்கடலில் சூரைக் காற்றுடன் பெய்யும் கனமழை – கடலுக்குச் செல்லாத முட்டம் மீனவர்கள்

webteam

அரபிக்கடல் பகுதிகளில் சூரை காற்றுடன் கனமழை பெய்து வருவதால் குளச்சல், முட்டம், மீன்பிடி துறைமுகங்களைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாத நிலையில், படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் குமரிக்கடல் பகுதிகளில் சூரை காற்றுடன் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் முதல் நீரோடி வரையிலான அரபிக்கடல் பகுதிகளில் நேற்று மாலை முதல் சூரை காற்று வீசி வருகிறது.

இந்த நிலையில் இன்று அரபிக்கட.ல் பகுதியில் சூரை காற்றுடன் கனமழை பெய்து வருவதால் குளச்சல், முட்டம், மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 2000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாத நிலையில் தங்கள் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.