தமிழ்நாடு

அரபிக்கடல் பகுதியில் தொடரும் கனமழை... துறைமுகத்திலேயே முகாமிடப்பட்ட 6,000+ படகுகள்!

webteam

அரபிக்கடல் பகுதிகளில் தொடந்து பெய்யும் கனமழை காரணமாக 6000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாத நிலையில் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அப்படி அரபிக்கடலோர பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்வதோடு கடல் சீற்றமும் காணப்படுகிறது.

இதனால் குளச்சல், முட்டம் மீன்பிடித் துறைமுகங்களை தங்குதளமாகக் கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் சுமார் 6000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதையடுத்து தங்கள் படகுகளை பாதுகாப்பாக துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.