ஆகஸ்ட் 7ஆம் தேதிமுதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
பருவநிலை மாற்றம் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 7ஆம் தேதிமுதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையைப் பொருத்தவரை 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்திருக்கிறது.