மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயல் PT
தமிழ்நாடு

பெருங்குடியில் 45 செமீ மழைப்பொழிவு! 15 இடங்களில் கொட்டித்தீர்த்த அதி கனமழை!

PT WEB

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் கடந்த 2 நாட்களாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. சென்னையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகப்படியான மழை பதிவானதாக செய்தி வெளியான நிலையில், சென்னை மற்றும் சுற்றியுள்ள 15 இடங்களில் அதிகமான மழைப்பதிவு பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி அதிகப்படியாக பெருங்குடியில் 45செமீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும், பூவிருந்தவல்லியில் 34செமீ மழையும், ஆவடியில் 28 செமீ மழையும், காட்டுக்குப்பத்தில் 27 செமீ மழைப்பொழிவும், மற்ற இடங்களில் 20 செமீ-க்கும் மேலான மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.