தமிழ்நாடு

குளுகுளுவென மாறிய சென்னை: சுழன்றடிக்கும் காற்றுடன் பலத்த மழை!

webteam

அதிகாலை முதல் சென்னையில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசான மழை பெய்தது. இந்நிலையில் அதிகாலை முதல் சென்னையில் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

பாலவாக்கம், ஈ.சி.ஆர், திருவான்மியூர், விருகம்பாக்கம், அண்ணாநகர், சூளைமேடு, நுங்கம்பாக்கம், அமைந்தகரை, சேத்துப்பட்டு, வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வெப்பத்தால் தவித்து வந்த நிலையில் திடீர் மழையாலும், காற்றாலும் சென்னை மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடுமையான காற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.