தமிழ்நாடு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை

sharpana

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் மையப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.