சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
தற்போது பூந்தமல்லி, ஆவடி, திருநின்றவூர், அம்பத்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அசோக் நகர், வடபழனி வள்ளுவர் கோட்டம், பெசண்ட் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல், எழும்பூர், சேத்துப்பட்டு, பாரிமுனை, கீழ்பாக்கம், புரசைவாக்கம், அயனாவரம், அண்ணாநகர், நுங்கம்பாக்கத்திலும் மழை பெய்து வருகிறது. காற்றும் பலமாக வீசுகிறது. இதனால், பல இடங்களில் புளுதி படலமாக காணப்படுகிறது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர், வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்து இருந்தார்.