தமிழ்நாடு

சென்னை மற்றும் புறநகரில் கடுமையான பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்

Veeramani

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இன்று அதிகாலை நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழகம் முழுவதும் சில நாட்களுக்கு முன்பு வரை கடுமையான மழைப்பொழிவு இருந்த நிலையில், தற்போது கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் நிலவும் பனி மூட்டம் காரணமாக கனரக வாகனங்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டனர். காலை 8 மணியை கடந்தும் பனி மூட்டம் நிலவியது.