தமிழ்நாடு

சென்னையில் கடும் பனிமூட்டம்: விமானங்கள் தாமதம்!

webteam

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பனிமூட்டமாகக் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியதாகக் தெரிவித்தனர்.

பனி காலம் தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மாலையிலேயே குளிர் வாட்ட ஆரம்பித்துள்ளது. இரவில் அதிகரிக்கும் குளிர், அதிகாலையில் பனிமூட்டமாகக் காட்சியளிக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக பனிமூட்டம் அதிகரித்ததை அடுத்து வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வண்ணம் பனி மூட்டமாக காலையில் காணப்பட்டது. 

பனிமூட்டம் காரணமாக சென்னையில் தரையிரங்க வேண்டிய மஸ்கட், மொரிசீயஸ் விமானங்கள் பெங்களூருவுக்குத் திருப்பிவிடப்பட்டன. சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்லவிருந்த 12 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.