தமிழ்நாடு

சிறைக்கைதிகள் இருவருக்கு காய்ச்சல் - ரத்த மாதிரிகள் ஆய்வு..!

webteam

திருப்பத்தூர் கிளைச் சிறை கைதிகள் இருவர் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் உமராபாத் பகுதியை சேர்ந்தவர்கள் அன்பு (31), அதியமான் (30) . இவர்கள் இருவரும் கடந்த திருப்பத்தூர் கிளைச் சிறையில் சாராய வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இவர்கள் இருவருக்கும் திடீரென காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதனை அறிந்த சிறைத் துறையினர் மருத்துவமனைக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் மருத்துவர்கள் இருவரையும் அழைத்து சென்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருவரின் ரத்த மாதிரிகளை ஆய்வுக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.