தமிழ்நாடு

நீலகிரி: கொரோனா பாதித்தவர்களை சிகிச்சைக்கு அழைத்தபோது அரிவாளை காட்டி மிரட்டல்

JustinDurai
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கொரோனாவால் பாதித்தவர்களை சிகிச்சை மையத்திற்கு அழைத்துவர சென்ற சுகாதாரத்துறை பணியாளர்களை சிலர் ஆயுதங்களை காட்டி மிரட்டல் விடுத்தனர்.
புத்தூர்வயல் பழங்குடியின கிராமத்தில் குழந்தைகள் உள்பட 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துவரச் சென்ற சுகாதாரப் பணியாளர்களை, அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அளிவாளை காட்டி மிரட்டி ஊருக்குள் வரக்கூடாது என எச்சரித்துள்ளார். அதேபோல் மற்றொருவர் கம்பு மூலம் பணியாளர்களுக்கு மிரட்டல் விடுத்ததால் காவல்துறையினர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். பின்னர் வேறு வழியின்றி அவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க சுகாதார பணியாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.