தமிழ்நாடு

உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை: விஜயபாஸ்கர்

Sinekadhara

10 நாட்களில் பிரிட்டன் வழியாக பல நாடுகளில் இருந்து சென்னை வந்த 1088 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அதனால் மக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

பிரிட்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். அதில், ’’அரசின் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால் கொரோனா பற்றி மக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை. கடந்த 10 நாட்களில் பிரிட்டன் வழியாக பல நாடுகளில் இருந்து சென்னை வந்த 1088 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்” என்று கூறினார்.