தமிழ்நாடு

“2 கழகங்களுக்கு மாற்றாக ரஜினி அமைவார் என மக்கள் எதிர்பார்த்தனர்” - துக்ளக் குருமூர்த்தி

Sinekadhara

ரஜினி அரசியலுக்கு வருவார் என மக்கள் நம்பினர் என்று இந்தியா டுடே நிகழ்வில் பேசிய துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “இரண்டு பெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் அந்த இடத்தை ரஜினி நிரப்புவார் என்று  மக்கள் எதிர்பார்த்தனர். அதேபோல் தமிழகத்துக்கு நல்லது செய்யவேண்டும் என்று ரஜினியும் காத்துக்கொண்டிருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரஜினியால் அரசியலுக்கு வரமுடியாமல் போய்விட்டது” என்றார்.