தமிழ்நாடு

"அமைச்சர் பதவியை விட தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம்"-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

EllusamyKarthik

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் இரண்டாவது தலைநகர் குறித்த பேச்சுகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் மதுரையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:-

“தமிழகம், தென் மாவட்டம் மற்றும் மதுரையின் வளர்ச்சி முக்கியமா? உங்களது அமைச்சர் பதவி முக்கியமா? என என்னை முதல்வர் மற்றும் துணை முதல்வர் கேட்டால் நான் தென் தமிழகத்தின் வளர்ச்சி தான் முக்கியம் எனக் கூறுவேன்” என தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு தேவை தென் தமிழகத்தின் வளர்ச்சி. அதை முன்னிறுத்தி நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.