தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக குறைப்பு

Veeramani

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது, 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கடந்த 7ஆம் தேதி 2 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இரண்டு நாட்களாக மழை இல்லாத நிலையில், அணைக்கான நீர்வரத்து 400கன அடியாக உள்ள நிலையில், உபரி நீர் திறப்பு 250 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஏரியின் நீர்மட்டம் 21.43 அடியாக உள்ளது.