தமிழகம் முழுவதும் தீபாவளிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதன் மூலம் அரசுக்கு சுமார் 8 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
சென்னையில் பணியாற்றும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாடும் வகையில் தமிழக அரசு கடந்த 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கியது. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கோயம்பேடு, அண்ணாநகர், சைதாப்பேட்டை, தாம்பரம் சானிட்டோரியம், பூவிருந்தவல்லி ஆகிய இடங்களில் இருந்து மொத்தம் 10993 பேருந்துகள் இயக்கப்பட்டன. சுமார் 5 லட்சம் பயணிகள் இந்த சிறப்பு பேருந்துகளில் பயணித்து சொந்த ஊர்களுக்கு சென்றடைந்தனர். சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதன் மூலம் அரசுக்கு தற்போது வரை 5,01,43,000 ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. தவிர மீண்டும் சென்னை வருவதற்காக ஒரு லட்சம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதால் 3,34,00,000 ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.