தமிழ்நாடு

'இந்தியாவை நம்பர் 1 நாடாக்க பிரதமர் மோடி இலக்கு' - ஆளுநர் ஆர்என் ரவி

JustinDurai

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் முதன்மை நாடாக்க பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாக ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை எம்ஆர்சி நகரில் மீன்வளத்துறை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்று பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, இந்தியாவை உலகின் நம்பர் ஒன் நாடாக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் இதற்காக அடுத்த 25 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாம்: `கோயில் அலுவலகங்களில் அசைவம் சாப்பிட அனுமதியில்லை'- அமைச்சர் சேகர் பாபு