தமிழ்நாடு

'ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு'- தனியார் நிகழ்ச்சியில் ஆளுநர் உரை

webteam

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியார் மருத்துவமனையை திறந்துவைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு எனக்கூறி தனது உரையை முடித்தார்.

தண்டலம் கிராமத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட மருத்துவமனையை ஆளுநர் திறந்துவைத்தார். பின்னர் பேசிய அவர், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இறுதியில் அவர் ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு எனக்கூறி உரையை முடித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் இறுதியில், ஜெய்ஹிந்த் உச்சரிக்கப்படாதது பேசுபொருளானது. இந்த சூழலில், நிகழ்ச்சியொன்றில் ஜெய்ஹிந்த் மற்றும் ஜெய் தமிழ்நாடு என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.