தமிழ்நாடு

பல துறைகளில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: ஆளுநர் பெருமிதம்

PT WEB

மாநில அரசின் அயராத முயற்சிகளின் காரணமாக தமிழ்நாடு பல துறைகளில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்துள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்டோருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்து அளித்தார்.

அப்போது பேசிய ஆளுநர், ''செழுமையான பண்பாடு, பழமையான மொழி மற்றும் நட்பு பாராட்டும் மக்களின் உறைவிடமாக தமிழ்நாடு திகழ்கிறது. கொரோனா இரண்டாவது அலையை எதிர்த்து போராட அயராது பணியாற்றிய முதல்வர் மற்றும் முன்களப்பணியாளர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார். அதனைதொடர்ந்து கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனிடையே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு, திருக்குறள் பன்னாட்டு பதிப்பு புத்தகங்களை வழங்கினார்.