தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவிகள் கின்னஸ் சாதனை முயற்சி

Rasus

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவிகள் கயிறு தாண்டுதலில் நிமிடத்திற்கு 360 முறை தாண்டி புதிய கின்னஸ் சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியை அடுத்த கல்மண்டபம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் 14 பேர் ஒரே நேரத்தில், நிமிடத்திற்கு 360 முறை கயிற்றினை தாண்டி புதிய கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். மாணவிகள் செய்த சாதனை நிகழ்வானது மாணவர்கள் மத்தியில் வியக்கத்தக்க வகையில் அமைந்திருந்தது. இந்த சாதனை நிகழ்வினை பதிவு செய்து அரசு பள்ளி சார்பில், கின்னஸ் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, தங்களுடைய 3 மாத கடின உழைப்பில் இத்தகைய சாதனை முயற்சியை செய்ததாகவும், தங்களுடைய புதிய வகையிலான சாதனையை கின்னஸ் நிர்வாகம் அங்கீகரிக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தனர். இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தோடு வாழவும் படிப்பில் கவனமும் செலுத்தவும் ஏதுவாக உள்ளதாக மாணவிகள் தெரிவித்தனர்.