தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாய விலைக் ‌கடைகள் - தமிழக அரசு அரசாணை

webteam

தமிழகம் முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாய விலைக் ‌கடைகளை திறப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மக்களின் குடியிருப்புக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு, 9.66 கோடி‌ ரூபாய் மதிப்பில் அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் திறக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான அரசாணை‌யை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில், 5,36,437 குடும்‌ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்‌கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மா நகரும் நியாய விலைக்கடைகளின் செயல்படும் நாள் மற்றும் இடம் ஆகியவற்றிற்கு ஆட்சியரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் விநியோகிக்கும் இடமானது, அரசு கட்டடங்கள், உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டடங்கள், பொதுமக்கள் அதிகம்‌ கூடும் இடங்களாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்‌ளது. அம்மா நகரும் நியாய விலைக் க‌டைகள் தொடங்க எடுக்கப்பட்ட நடவடிக்‌கைகள் குறித்த விவரங்களை, வருகிற 20 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து இணைப்பதிவாளர்களுக்கும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். நாகை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கரூர், தஞ்‌சை ஆகிய மாவட்டங்களில் அதிகமான நகரும் நியாய விலைக் கடை‌கள் அமைய உள்ளது குறிப்பி‌டத்தக்கது‌.