தமிழ்நாடு

திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கப்படும் - தமிழக அரசு

webteam

திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியுதவியாக ரூ.2,000 வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா சூழலில் தங்களில் பலர் வேலை இழந்து இருப்பதால் தங்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கவேண்டும் என திருநங்கைகள் அரசிற்கு கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற அரசு இவர்களுக்கு கொரோனா நிவாராண நிதியாக ரூ.2,000 வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது.

திருநங்கையர் நல வாரியத்தில் பதிவு செய்த அனைத்து திருநங்கைகளுக்கும் இந்த கொரோனா நிவாரண நிதி அளிக்கப்படும். இதன் வாயிலாக 6553 திருநங்கைகள் பலன் பெறுவர். இதில் ரேசன் அட்டை வைத்திருக்கும் திருநங்கைகள் முன்னதாக அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி ரூ.4,000 உடன் சேர்த்து இதனையும் பெற்றுக்கொள்ளலாம்.