தமிழ்நாடு

ஜெருசேலத்திற்கு புனிதப்பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி 37,000 ஆக உயர்வு - முதல்வர் பழனிசாமி

webteam

ஜெருசேலத்திற்கு புனிதப் பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி 37,000 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இது குறித்து சென்னையில் அதிமுக சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, “ ஜெருசேலத்திற்கு புனிதப் பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி 20,000 லிருந்து 37,000 ஆக உயர்த்தப்படும்” என அறிவித்தார்.

முன்னதாக தமிழக பாஜக தலைவர் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை தெரிவிக்கும் என கூறிய கருத்து சர்ச்சையை ஏர்படுத்திய நிலையில் அது குறித்து பேசிய அவர், “கூட்டணி வேறு கொள்கை வேறு கூட்டணி. கொள்கைப்படிதான் நாங்கள் செயல்படு்வோம். எந்த ஒரு வேருபாடும் இல்லாமல் அனைவரும் ஒன்றாக இருப்பது தமிழகத்திற்கு பெருமை” என்றார்.