தமிழ்நாடு

விவசாயிகளுக்காக ஒருநாள் ஊதியத்தை வழங்கும் அரசு பணியாளர்கள் ..!

விவசாயிகளுக்காக ஒருநாள் ஊதியத்தை வழங்கும் அரசு பணியாளர்கள் ..!

webteam

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை வறட்சியால் வாடும் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனர்.

தமிழக அரசின் டி பிரிவு ஊழியர்கள் 2 லட்சத்து 48 ஆயிரம் பேர் தங்கள் ஒருநாள் ஊதியத்தை விவசாயிகளுக்கு வழங்க பிடித்தம் செய்துக்கொள்ளுமாறு முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் சங்கம் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் சார்பாக இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.