தமிழ்நாடு

அரசு பஸ் டிரைக் தொடரும்: தொழிற்சங்கங்கள்

webteam

அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

சென்னையில் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியுவின் சவுந்திரராஜன் பேசும்போது, “கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்காததால் வேலைநிறுத்தம் தொடரும். அரசு அறிவித்த 1000 ரூபாய் இடைக்கால நிவாரணம் ஏற்க கூடியதாக இல்லை” எனத் தெரிவித்தார்.