தமிழ்நாடு

ஓபிஎஸ்சுடன் இணைந்து பிரசாரம்: வாசன் முடிவு

webteam

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ்சுடன் இணைந்து பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில், மதுசூதனன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு அந்த அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை இன்று காலை சந்தித்தார். இந்தச் சந்திப்புக் குறித்து ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்தில் தமாகா உறுதியாக ஒருங்கிணைந்து செயல்படும். ஆர்.கே.நகரில் மதுசூதனனுக்கு ஆதரவாக தமாகாவினர் இன்று முதல் பிரசாரம் மேற்கொள்வார்கள். நாளை மறுநாள் ஓபிஎஸ் உடன் இணைந்து நான் பிரசாரம் மேற்கொள்வேன்’ என்றார்.