தமிழ்நாடு

வங்கி ஊழியர்கள் தாக்கி விவசாயி உயிரிழப்பு: முத்தரசன், ஜி.கே.வாசன் கண்டனம்

webteam

திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறும்போது, விவசாயி ஞானசேகரன் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து வங்கி ஊழியர்கள் கடும் தாக்குதல் நடத்தியதாகவும், கிளை மேலாளர் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். விவசாயி குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் நடவடிக்கையால் உயிரிழந்துள்ள விவசாயின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.