தமிழ்நாடு

தற்காலிக ஓட்டுநரால் விபத்து... பரிதாபமாக பெண் உயிரிழப்பு

Rasus

திருப்பூரில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

13-வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 14-ஆம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய இறுதிக்கட் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பயணிகளின் பிரச்னையை கருத்தில் கொண்டு தற்காலிக ஓட்டுநர்களை வைத்து ஒரு சில பேருந்துகளை மட்டும் தமிழக அரசு இயக்கி வருகிறது. தற்காலிக ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கினால் விபத்து நிகழும் அபாயம் ஏற்படும் என எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பூரில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.